பொ.மல்லாபுரத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டட தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் பதிவு பெற்ற 750க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பு நிவாரண பொருட்களான அரிசி பருப்பு சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி மற்றும் அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திரு யசோதா மதிவாணன். சுப்பிரமணிய சிவா சர்க்கரை ஆலை தலைவர் . முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு.விசுவநாதன். பொம்மிடி நகர கழக செயலாளர் .M.F.டோமினிக் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
மோகன்ராஜ் நிருபர் தர்மபுரி